states

img

உத்தரப்பிரதேசம் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளிகளை சுட்டுப்பிடிப்பது அதிகரிப்பு

பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தின் ஜான் பூர் மாவட்டத்தில் செவ் வாயன்று நள்ளிரவு நடைபெற்ற திரு மண ஊர்வலத்தை பாதியில் புறக்க ணித்து அஜய் பிரஜாபதி (23), அவரது  சகோதரர் அங்கித் (20) ஆகியோர் மது அருந்தச் சென்றுள்ளனர்.  இந்த விவகாரம் தொடர்பாக திரு மணத்துக்கு வந்திருந்த விருந்தினர் களுக்கும், இரு சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு  மோதலாக மாறியது. இந்நிலையில்,  சகோதரர்கள் இருவரையும் திரு மணத்திற்கு விருந்தினர்களாக வந்த வர்கள் கத்தியால் குத்திக்கொன்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஷாகஞ்ச் சர்க்கிள் நகர போலீசார் 3 பேரை சுட்டுப்பிடித்து மொத்தம் 6 பேரை கைது செய்துள்ளனர். 3 பேர்  போலீசாரை தாக்கி தப்ப முயன்றதாக வும், அவர்களை சுட்டுப்பிடித்ததாக வும் போலீசார் விளக்கம் அளித்துள்ள னர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காலில் காயமடைந்த 3 பேர் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதிகரிப்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாத காலத்தில் மட்டும் 6-க்கும் மேற்  பட்டோரை உத்தரப்பிரதேச போலீ சார் சுட்டுப்பிடித்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்னர் பேருந்து நடத்துநரை தாக்கிய இஸ்லாமிய மாணவர் கல்லூரி முதல்வரிடம் சர ணடைந்தார். சரணடைந்த மாண வர் போலீசார் பிடியில் தப்பியதாக  கூறி மாணவரை போலீசார் துப்பாக்கி யால் சுட்டதாகக் கூறினர். இவ்வாறு சின்னஞ்சிறு சம்பவங்களில் ஈடுபடும்  குற்றவாளிகளை கூட துப்பாக்கியால்  சுட்டுப்பிடிக்கும் உத்தரப்பிரதேச போலீசாரின் வாடிக்கையான சம்ப வங்களுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பி டத்தக்கது.